நீதி தேவன் (1971) படத்தில் இடம் பெறாத பாடல்.
பாடல் : கண்ணதாசன்
இசை : .கே.வி. மகாதேவன்
பாடியவர் : Dr. சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் & எல்.ஆர். ஈஸ்வரி
Subscribe to Our YouTube Channel
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join
Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a
Please Visit and Subscribe to our Dailymotion Channel through the link below
https://www.dailymotion.com/seerkazhi.govindarajan
Please Follow Our Instagram Page
https://www.instagram.com/sirkazhifamily
Please follow Our TikTok Page
https://www.tiktok.com/@sirkazhifamily
கோடையிலே மழைப்பொழிஞ்சி ஓடையிலே நீர் நிறைஞ்சி கானல் செழிக்குதுன்னு கொட்டு மேளம்!
ஐயா கனவு பலிக்கிதுன்னு கொட்டு மேளம்!
பட்டத்துக்கு பிள்ளை ஒன்னு
கட்டித்தங்கம் போல வந்து...
தொட்டில் போட போகுதுன்னு
கொட்டு மேளம்!
நம்ம தோளிலாடப் போகுதுன்னு கொட்டு மேளம்!
மாரியம்மா மனசு வெச்சா காரியம் உண்டு!
நல்ல மாணிக்கப் பொம்மைப் போல ஓவியம் உண்டு!
ஆமாம் மாணிக்கப் பொம்மைப் போல ஓவியம் உண்டு!
வாடியம்மா எனக்கும் கூட ஆசையும் உண்டு!
ஒரு வருசத்திலே நமக்கும் கூட வாரிசு உண்டு!
ஆமாம் வருசத்திலே நமக்கும் கூட வாரிசு உண்டு!
ராஜா பெத்த பிள்ளைக்கு ஒரு சேவகன் என்று வந்து நம்மப் பேரைக் காக்க வேனும் பிள்ளைப் பிறந்து!
ரோஜா பெத்த பிள்ளைக்கு ஒரு சேவகன் என்று வந்து நம்மப் பேரைக் காக்க வேனும் பிள்ளைப் பிறந்து!
மாசம் என்ன மெல்லச் சொல்லு,
மாசம் என்ன மெல்லச் சொல்லு வாய் திறந்து
எப்போ வடிவம் ஆகுமடி
உனக்கு தங்க விருந்து!
தங்க மயில் முருகன் என்று கொட்டு மேளம்
செந்தாமரைப்பூ கண்ணன் என்று கொட்டு மேளம்!
பொன்னித்தீவு ரங்கன் என்று கொட்டு மேளம்!
அந்த பொன்னழகன் ராமனுக்கு கொட்டு மேளம்!
இந்த கதை இப்படியே தொடர வேனும்!
இந்த இன்பம் எல்லாம் இன்னும் இன்னும் வளர வேனும்!
சந்ததிகள் வெள்ளம் என ஓட வேனும் !
நாம தலை நிமிர்ந்து வெற்றி நடைபோட வேனும்!